Friday, 6 August 2010

என் உயிர் தோழி

என் உயிர் தோழி 
************************
 எப்படியோ வாழ்ந்திருப்பேன் ....
உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் ... ஆனால் 
"நீ இப்படித்தான் வாழவேண்டும்" என்று என் வாழ்க்கையை தீர்மானித்தவள் நீ தான்...
அதற்கு உறுதுணையாக நின்றவளும் நீ தான்...
உன் ஆசை தீர்மானத்திற்கு இணங்க 
என் வாழ்க்கையை நான் மாற்றிக்கொண்டேன் ....
இப்போது நல்ல நிலையிலும் இருக்கிறேன் உன் விருப்பப்படி...
ஆனால்.....
அதை ரசிக்கத்தான் நீ இப்போது என்னுடன் இல்லை....
இந்த பிரிவு நமக்கு(நட்புக்கு) தேவையா.....?
நீயே சொல் ... என் உயிர் தோழி ...

உன் நினைவு 
*******************
யாரோ சொன்னார்கள்
" சந்தோஷமாக இருக்கும்போது நீ நேசிப்பவளை நினைப்பாய்...
சோகமாக இருக்கும்போது உன்னை நேசிப்பவளை நினைப்பாய் ..."
என்று... ஆனால் எனக்கோ 
சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் 
"என்றும் உன் நினைவு " மட்டும் தான் .... 
காரணம்....
நான் நேசிப்பவளும் நீ தான்.....
என்னை நேசிப்பவளும் நீ மட்டும் தான்... 

நீயே சொல் 
*****************
எனக்கும் எல்லா உறவுகளும் இருக்கிறார்கள் ...
என் தாய் தந்தை ....
         சகோதரி...
         அண்ணன் தம்பி....
         நண்பர்கள்....
         தோழிகள்....
ஏன் காதலி கூட இருந்தால்....
ஆனால் உன்னை மட்டும் இந்த உறவுகளில் சேர்த்த மனம் வரவில்லை ...
நீயே சொல்லடி... உனக்கும் எனக்கும் இருக்கும்
இந்த இனிய உறவுக்கு பெயர் என்ன....? 

No comments:

Post a Comment